அண்மைய செய்திகள்

recent
-

மெக்ஸிக்கோவில் ட்ரக் விபத்து: 53 பேர் பலி

மெக்ஸிக்கோவில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற ட்ரக் விபத்திற்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த ட்ரக் பாலமொன்றில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தில் மேலும் 105 பேருக்கு (83 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் ) காயமேற்பட்டுள்ளது. விபத்தின் போது குறித்த ட்ரக்கில் 150 பேர் வரை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 49 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர். 

 இவர்களில் பெரும்பாலானோர் மத்திய அமெரிக்காவில் இருந்து பயணித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் தாங்கள் அண்டை நாடான குவாத்தமாலாவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். அதனால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதிகளவில் மனிதர்களை ஏற்றிச்சென்றதால் எடை தாங்காமல் ட்ரக் கவிழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மெக்ஸிக்கோவில் ட்ரக் விபத்து: 53 பேர் பலி Reviewed by Author on December 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.