அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார தொழிற்சங்கங்கள் காலவரையறை அற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று முன்னெடுப்பு!

சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையறையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன. மாகாண வைத்தியசாலைகளை மையமாகக் கொண்டு இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், முதற்கட்டமாக வடமேல் மாகாணத்திலுள்ள வைத்திய சாலைகளில் இன்று 24 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்ப டவுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

மத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் 24 மணித்தியால வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது. அரசாங்கத்தால் இன்னும் தீர்க்கப்படாத ஏழு கோரிக்கை களை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக கூட்டமைப்பின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்தார். சுகாதார அமைச்சு, நிதி அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் கவனத்துக்கு ஏழு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கம் தலையிட்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்கத் தவறியதால் கூட்டமைப்பு இரண்டாம் கட்ட தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு கூட்டமைப்பின் தலைவர் தமது கவலைகளைத் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையை முன்னெடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதார தொழிற்சங்கங்கள் காலவரையறை அற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று முன்னெடுப்பு! Reviewed by Author on December 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.