அண்மைய செய்திகள்

recent
-

இரவு நேரத்தில் புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணலகழ்வு ! பொலிசார் உடந்தையா??

இரவு நேரத்தில் புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணலகழ்வு ! பொலிசார் உடந்தையா?? முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மணலகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் இரவு நேரங்களில் அதிகளவான சட்டவிரோத மணலகழ்வு செயற்ப்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என குற்றம் சுமத்தப்படுகிறது நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் குறிப்பாக புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் நான்கு சந்திகளிலும் இராணுவ சோதனை சாவடிகளும் உள்ளபோதும் நகர்ப்பகுதி ஊடாக உழவு இயந்திரத்தில் மணல் கொண்டு செல்லப்படுகிறது இருப்பினும் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் பொலிசாரால் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

 புதுக்குடியிருப்பு நகர் பகுதியிலேயே இவ்வாறு சட்டவிரோத மணலகழ்வு இடம்பெறுவதை அறிந்தும் இராணுவமோ பொலிசாரோ இவர்களை கைது செய்யாமையானது இவர்களின் உடந்தையுடனேயே இவை இடம்பெறுகிறது என்பதை சுட்டி நிக்கிறது இவ்வாறு இரவு நேரத்தில் நான்கு உழவு இயந்திரங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் இடபெற்றபோது புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகைதந்தும் அவர்களை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத சம்பவம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது

சண்முகம் தவசீலன்
2022.04.03









இரவு நேரத்தில் புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணலகழ்வு ! பொலிசார் உடந்தையா?? Reviewed by Author on April 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.