சாதாரண பெரும்பான்மையையும் இழக்கிறது அரசு! டக்ளஸ், பிள்ளையான், ஜீவன் கைவிரித்தால் ஆப்பு!! இடைக்கால அரசு அமையும் சாத்தியம்!!
பங்காளிகளின் வெளியேற்றம், இராஜாங்க அமைச்சர்களின் இராஜினாமா, ஆளுங்கட்சியினரின் அதிருப்தி ஆகியவற்றுக்கு மத்தியில் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வசம் -

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -117

ஈபிடிபி - 02

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 01

அரவிந்தகுமார் - 01

டயானா - 01 - 122 ஆசனங்களே உள்ளன.
அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள ஏழு பேர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
1. சுசில் பிரேமஜயந்த
2. விஜயதாச ராஜபக்ச
3. சந்திம வீரக்கொடி
4. விதுர விக்ரமநாயக்க
5. பிரேமநாத் சீ தொலவத்த
6. நிமல் லான்சா
7. ரொஷான் ரணசிங்க

122 - 7 = 115

ஆக - ஆளுங்கட்சி வசம் தற்போது 115 ஆசனங்களே உள்ளன. இந்நிலையில் அரசிலிருந்து வெளியேற தயார் என்ற அறிவிப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் விடுத்துள்ளது.

115-2 = 113

எனவே, டக்ளஸ், பிள்ளையான் ஆகியோர் ( 2+1 = 3) அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டால் (113 - 3 = 110) நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.

சிலவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (4), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (02), அலி சப்ரி (புத்தளம்) (01) ஆகியோரின் ஆதரவை பெற்றால் அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் எதிரணி எம்.பிக்களை வளைத்து போட்டால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

தற்போதைய சூழ்நிலையில் கட்சி தாவல்கள் என்பது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே! தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கும் சாத்தியம் குறைவு.

எனவே, இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு அரசு முற்படலாம்.

நாடாளுமன்றத்தின் பதவிகாலம் இரண்டரை வருடங்கள் முடிந்த பின்னர் 2023 பெப்ரவரியில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குசெல்லக்கூடும் . ( தற்போதைய சூழ்நிலையில் இதுவே ஏற்புடைய நடவடிக்கையென அரசியல் கட்சிகள் கருதுகின்றன.) ஏனெனில் சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணியின் நிலைப்பாடு இதுவாகவே உள்ளது.

பிரதமர் பதவி துறந்தால், அமைச்சரவையும் கலைந்துவிடும். பிறகு புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம். இது இடைக்கால அரசுக்கான நகர்வாக அமையலாம்.

பொதுத்தேர்தலில் மொட்டு கட்சி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் ஆசனங்கள் சகிதம்) 145ஆசனங்களை வென்றது.

இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - 14 (நா.உ)
தேசிய சுதந்திர முன்னணி - 06
ஜனநாயக இடதுசாரி முன்னணி - 02
பிவிதுரு ஹெல உறுமய - 01
கம்யூனிஸ் கட்சி - 01
லங்கா சமசமாஜக்கட்சி - 01 (தேசியப்பட்டியல்)
‘யுதுகம’ - 01 ஆகியன அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டில் உள்ளன.

145 -26 = 119
எமது மக்கள் சக்தி - 01
தேசிய காங்கிரஸ் - 01 என்பவனும் 11 கட்சிகளின் கூட்டணியில் உள்ளன. 119 -2 = 117 ( அரசு வசம் தற்போது உள்ள ஆசனங்கள்) எனவேதான், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் தற்போது 117 ஆசனங்களே உள்ளன என்று மேலே குறிக்கப்பட்டுள்ளது.

அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தாலும் அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்குகூட அரசு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
No comments:
Post a Comment