மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் பலி!
பொகவந்தலாவ சென். விஜயன்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சுரேந்திரகுமார் அபிஷாந்த் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும், தரம் 1 – 5 வரை சென்.விஜயன்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த இச்சிறுவன் தரம் 6 தொடக்கம் அனுராதபுரம் கெக்கிராவ பெப்டிஸ் தமிழ் மாகா வித்தியாலயத்தில் 2022ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஐந்து சகோதரர்களுடன் பிறந்த சுரேந்திரகுமார் அபிஷாந்த் தனது குடும்பத்தில் மூத்த பிள்ளையாவார்.
தனது குடும்பத்துடன் அனுராதபுரம் கெக்கிராவை பகுதியில் வசித்து வந்தவர்கள் தனது சொந்த ஊரான பொகவந்தலாவ சென்.விஜயன்ஸ் தோட்டத்திற்கு வருகைத் தந்து இரண்டு மாத காலப்பகுதியே ஆகிறது.
சம்பவம் தொடர்பில் சிறுவனின் சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் பலி!
Reviewed by Author
on
June 03, 2022
Rating:

No comments:
Post a Comment