அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட சங்கத்தின் மேற்பார்வை உத்தியோகத்தராக மன்னார் கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் பி.ஞானராஜ் நியமனம்.

இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் மேற்பார்வை உத்தியோகத்தராக மன்னார் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளரும் , மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் செயலாளருமான ப.ஞானராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை பாடசாலை உதை பந்தாட்டத்தை திட்டமிட்டு வழி நடத்தி சர்வதேச மட்டத்தில் தரமுயர்த்த தகுதியான மேற்பார்வை மற்றும் பொறுப்பு கூறும் தரத்தில் அதிகாரியை புதிய 03/2021 சுற்று நிருபத்திற்கமைய நியமிக்க, இலங்கை மத்திய கல்வி அமைச்சு நாடளாவிய ரீதியாக SLEAS அதிகாரிகளிரமிருந்து விண்ணப்பம் கோரி, நேர்முகத் தேர்வு நடத்தியது.

 குறித்த நேர்முகத் தேர்வில் இலங்கையிலிருந்து ஒரே ஒரு தமிழனும் மன்னார் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளரும் , மன்னார் மாவட்ட உதைபந்தாட லீக் செயலாளரும், உதை பந்தாட்டத்தில் சகல துறை விற்பன்னருமாகிய ப.ஞானராஜ் விண்ணப்பித்து , நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டு , இலங்கை மத்திய கல்வி அமைச்சினால் இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் மேற்பார்வை உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்)






இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட சங்கத்தின் மேற்பார்வை உத்தியோகத்தராக மன்னார் கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் பி.ஞானராஜ் நியமனம். Reviewed by Author on June 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.