அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சர்வமத இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த சமூக நலன் செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு.

மன்னார் பிரதான பால பகுதியில் கழிவு அகற்றும் நடவடிக்கைகள் மற்றும் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு இன்று சனிக்கிழமை (27) காலை இடம் பெற்றிருக்கின்றது. கழிவு முகாமைத்துவத்தினூடாக தொற்று நோயிலிருந்து மீட்டெடுப்பதோடு கண்டல் தாவர நடுகையின் ஊடாக அருகிவரும் உயிர்ப்பல்வகைமையினைப் பாதுகாக்கவும் சூழலை அழகுற செய்யும் நோக்கத்தோடு குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

 சர்வ மத இளையோர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து இன்றைய தினம் (27) காலை 10 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை மன்னார் பாலத்தின் அருகே குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். குறித்த பகுதியில் காணப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அற்றும் செயற்பாடும் கண்டல் தாவர நடுகையும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விழுது நிறுவன அதிகாரிகள் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சர்வமத இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த குறித்த சமூக நலன் செயல் திட்டத்தை பலரும் பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







மன்னாரில் சர்வமத இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த சமூக நலன் செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு. Reviewed by Author on August 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.