மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற கலாசார ஒன்றினைவு நிகழ்வு
குறித்த நிகழ்வில் ஆண்டாங்குளம் கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பங்குத்தந்தை மற்றும் மூன்று மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்
ஒவ்வொருவரும் தங்கள் மதம் சார்ந்த உணவுகளை வீட்டில் இருந்து தயாரித்து வந்ததுடன் ஏனைய மதத்தினருடன் பகிர்ந்து உண்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது
குறித்த செயல்திட்டத்தின் ஊடாக கடந்த வாரங்களில் மன்னார் மாவட்ட பிரதான பாலத்தில் சிரமதான பணி இடம் பெற்றதுடன் கண்டல் தாவரங்களும் நாட்டப்பட்டது மற்றும் ஆண்டாங்குளம் கார்மேல் கன்னியர் மடத்தில் உள்ள சிறுவர்களுக்கு "விழுமிய பண்புகளில் வளருவோம் கவலைகள் அனைத்தும் மறந்து " என்னும் தொனிப்பொருளில் விழுமிய கலந்துரையாடலும் மகிழ்வூட்டல் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடதக்கது
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற கலாசார ஒன்றினைவு நிகழ்வு
Reviewed by Author
on
August 31, 2022
Rating:

No comments:
Post a Comment