அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் விவகாரம்-மக்கள் விடுதலை முன்னணி மன்னார் பிரஜைகள் குழுவுடன் அவசர சந்திப்பு.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) மதியம் மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்து மன்னார் பிரஜைகள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடினர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இடம் பெற்று வருகின்ற கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆராயும் வகையில் வருகை தந்து மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர். 

 மக்களின் பிரச்சினைகள் குறித்து மன்னார் பிரஜைகள் குழு தொடர்ச்சியாக மக்களுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில் குறித்த பிரச்சினைகள் குறித்து அறிந்து கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் விஜயம் மேற்கொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்தனர். மேலும் மக்களுக்காக பிரஜைகள் குழுவினர் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக தாம் மன்னாருக்கு வருகை தந்ததாக கலந்துரையாடலின் போது தெரிவித்தனர். மேலும் மன்னார் மண்ணுக்கான போராட்டத்தில் மக்களுடன் மக்கள் விடுதலை முன்னணி என்றும் துணை நிற்கும். எனவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்காக முன் நிற்க வேண்டும்.என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் பிரஜைகள் குழுவினருடனான சந்திப்பின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.








மன்னாரில் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் விவகாரம்-மக்கள் விடுதலை முன்னணி மன்னார் பிரஜைகள் குழுவுடன் அவசர சந்திப்பு. Reviewed by Author on September 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.