அண்மைய செய்திகள்

recent
-

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இழக்க நேரிடும்

குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் மூலம் 36 வயதுடைய பெண்ணொருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 இது தொடர்பான வழக்கு நேற்று நீர்கொழும்பு நீதவான் சம்பிக ராஜபக்ஷ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 மாத சிறைத்தண்டனையும் ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. உயிரிழந்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் கணவர் ஆகியோருக்கு 2 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளார்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இழக்க நேரிடும் Reviewed by Author on October 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.