அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க உயர்நிலை பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம்: மூவர் பலி

அமெரிக்காவின் மிசூரி (Missouri) மாநிலத்தின் சென் லூயிஸ் நகரிலுள்ள உயர்நிலை பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்போது 7 பேருக்கு காயமேற்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி நேற்று(24) காலை 9 மணியளவில் பாடசாலைக்குள் நுழைந்த சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

 பாடசாலை கட்டிடத்தின் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், துப்பாக்கிதாரி எவ்வாறு பாடசாலைக்குள் நுழைந்தார் என்பது தெரியாதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துப்பாக்கிப் பிரயோகத்தின் போது திடீரென துப்பாக்கி இயங்காமல் போனமையால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். 19 வயதான துப்பாக்கிதாரி குறித்த பாடசாலையின் பழைய மாணவர் என பொலிஸாரால் அடையாளங்காணப்பட்டுள்ளது.


அமெரிக்க உயர்நிலை பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம்: மூவர் பலி Reviewed by Author on October 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.