அண்மைய செய்திகள்

recent
-

சீனா உள்ளூர் விவசாயிகளுக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை வழங்குகிறது

இலங்கையின் தொலைதூரப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சீன அரசாங்கம் 10.6 மில்லியன் லீற்றர் டீசல் நன்கொடையாக வழங்கவுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு டீசல் வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

 நவம்பர் மற்றும் டிசம்பருக்கு இடையில் டீசல் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் சீன அரசாங்கம் அவசரகால மனிதாபிமான நன்கொடையாக 5,500 மெட்ரிக் தொன் அரிசி மற்றும் ரூ.3 பில்லியன் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், உள்ளூர் அரசாங்கங்கள், நிறுவனங்கள், விகாரைகள் மற்றும் சமூக குழுக்கள் மூலமாக சீனா இலங்கைக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.


சீனா உள்ளூர் விவசாயிகளுக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை வழங்குகிறது Reviewed by Author on November 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.