அண்மைய செய்திகள்

recent
-

மண்ணெண்ணெய் இன்மையால் பல்வேறு உற்பத்தியாளர்கள், சேவை நிலையங்களுக்கு பாதிப்பு

களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் இன்மையால் பல்வேறு உற்பத்தியாளர்கள், வாகனங்களை சுத்தம் செய்யும் சேவை நிலையங்கள் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பண்டாரகம, ஹொரணை மற்றும் பாணந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் தமக்கு சுமார் 6 மாதங்களாக மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். 

 உள்நாட்டு எரிவாயு சந்தையில் தட்டுப்பாடு நிலவிய நாட்களில், மண்ணெண்ணெய்க்கான தேவையும் அதிகமாக இருந்தது. சந்தையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெரும்பாலான நுகர்வோர், சிறு கைத்தொழில் நிலையங்கள், உணவு உற்பத்தியாளர்கள் மாற்று வழிகளை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்ணெண்ணெய் இன்மையால் பல்வேறு உற்பத்தியாளர்கள், சேவை நிலையங்களுக்கு பாதிப்பு Reviewed by Author on November 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.