கடலில் மூழ்க தொடங்கிய கப்பல்: நடுக்கடலில் தத்தளித்த 306 இலங்கைத் தமிழர்களை மீட்ட சிங்கப்பூர் கடற்படை
இதனையடுத்து கொழும்புவில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சார்பில் சிங்கப்பூர், வியட்நாம், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படையை தொடர்பு கொண்டு நடுக்கடலில் சிக்கியவர்களை மீட்க இலங்கை அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூர் கடற்படை அந்த கப்பலையும், கப்பலில் பயணித்த 306 பயணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 306 பேரையும் பத்திரமாக வியட்நாம் கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். இன்று நள்ளிரவு 1 மணி அளவில் அந்த கப்பல் வியட்நாமை அடையும் என கூறப்படுகிறது. அதன் பிறகு தான் அந்த கப்பலில் பயணித்தவர்களின் விவரம் தெரிய வரும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடலில் மூழ்க தொடங்கிய கப்பல்: நடுக்கடலில் தத்தளித்த 306 இலங்கைத் தமிழர்களை மீட்ட சிங்கப்பூர் கடற்படை
Reviewed by Author
on
November 08, 2022
Rating:

No comments:
Post a Comment