அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித மரியாள் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு .

மன்னார் வலய கல்விப் பணிமனை க்குட்பட்ட பேசாலை புனித மரியாள் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு மற்றும் ஒளி விழா நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (23) பாடசாலையில், பாடசாலை அதிபர் செபஸ்டியான் ராஜேஸ்வரன் பச்சேக் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் 600 மாணவர்களை கொண்ட கல்வி செயல்பாட்டில் தொடர்ந்து பல சாதனைகளை தக்க வைத்து வரும் குறித்த பாடசாலை நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல நிகழ்வுகள் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

 இந்த நிலையில் 2019ம், 2020ம்,2021ம், ஆண்டுகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள் 66 பேர் உட்பட ஏனைய கல்வி செயல்பாடுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 250 பேர் சான்றிதழ்கள் , கேடயங்கள், நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலா நாதன், மன்னார் பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது .





சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித மரியாள் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு . Reviewed by Author on December 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.