மடு பிரதேசத்தில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
கிறிசலஸ் நிறுவனத்தின் ஒரு திட்டமாக பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக நடை பெறுகின்ற வன்முறைகள் சம்மந்தமாக அவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் மடு பிரதேச செயலகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மடு பிரதேசத்தில் சமூகம் சார்பாக பெண்கள் , சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் சிறிதளவில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
குறித்த வன்முறைகள் குறித்து அரச அரச சார்பற்ற அமைப்புகளின் உத்தியோகத்தர்கள் திணைக்களங்களுடன் இணைந்து பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் குறித்து பணியாற்றி வருகின்றனர்.
எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக சமூகத்தில் சட்டத்தை அமுல்படுத்தும் வேளையில் மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. நாங்கள் இப்பிரதேசத்தில் பெண்கள் , சிறுவர்களுக்கு எதிராக பல்வேறு பினக்குகளை கையாண்டு வருகிறோம்.
எனவே இவ்வாறான வன்முறைகளை கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் இவ்வாறான விழிப்புணர்வுகளை கொண்டு செல்லப்படுவது அவசியம் என தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட இளைஞர்கள் தயாரிக்கப்பட்ட குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
மடு பிரதேசத்தில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது
Reviewed by Author
on
March 24, 2023
Rating:
Reviewed by Author
on
March 24, 2023
Rating:


No comments:
Post a Comment