அண்மைய செய்திகள்

recent
-

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 2 ம் கட்டத்தின் ஆறாம் நாள் அகழ்வில் 5 மனித எலும்பு கூடுகள் மீட்பு

 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 20.11.2023 முதல்  முன்னெடுக்கப்பட்டுவருகின்றன


அந்தவகையில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆறாவது நாளாக இன்றும் (25.11.2023) இடம்பெற்றுள்ளது.இன்றைய அகழ்வு பணியின் போது 5 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி க.வசுதேவா குறிப்பிட்டுள்ளார்

அத்துடன், துப்பாக்கி சிதறல்கள், சன்னங்கள் மீட்கப்பபட்டுள்ளதுடன் கையில் அணியப்படும் இலக்கத்தகடும் மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார். மேலும் அகழ்வுப்பணிகள் நாளை(26) இடம்பெறாது எனவும் நாளை மறுதினம் (27) அகழ்வு பணிகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது










கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 2 ம் கட்டத்தின் ஆறாம் நாள் அகழ்வில் 5 மனித எலும்பு கூடுகள் மீட்பு Reviewed by Author on November 25, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.