அண்மைய செய்திகள்

recent
-

மன்னாகண்டல் கிராமத்தில் 303 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

 மன்னாகண்டல் கிராமத்தில் 303 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு  



முல்லைத்தீவு  மாவட்டத்தில்  கடந்த மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளம்  காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல்  கிராம அலுவலர் பிரிவு   கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது

குறிப்பாக குறித்த கிராமத்தின் அனைத்து பகுதிகளும் நீரில் மூழ்கி  அனைத்து  குடும்பங்களும் பாதிப்பை எதிர்நோக்கி இருந்த நிலைமையில்  அனைத்து குடும்பங்களும் பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தனர்   இந்த பாதிப்பை எதிர்கொண்ட 303 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (30) இடம் பெற்றது

யுனிவெர்சல் பீஸ் பெடரேஷன் அமைப்பினால் தலா  4000 ரூபாய் பெறுமதியான உலருணவு  பொதிகளே  இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு  மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான  காதர் மஸ்தான் அவர்களும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் குறித்த பகுதி கிராம அலுவலர் குறித்த நிறுவனத்தின்   பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இவர்களுக்கான உணர்வு பொதிகளை வழங்கி வைத்தனர்.






















மன்னாகண்டல் கிராமத்தில் 303 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு Reviewed by வன்னி on January 31, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.