அண்மைய செய்திகள்

recent
-

வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவு - முள்ளிவாய்க்காலில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

 >2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல்  மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.


அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது


இதனனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்


இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்ப்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன


அந்தவகையில் தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று (16) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தாயக உறவுகள் நினைவேந்தல் குழுஆகியன இணைந்து  முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டிடத்திற்கு முன்பாக  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்ப்பாட்டை முன்னெடுத்தனர்









வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவு - முள்ளிவாய்க்காலில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி Reviewed by Author on May 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.