தலைமன்னாரில் 9 வயது சிறுமி கொலையுடன் தொடர்புடைய நபர் தப்பியோட்டம்- பொதுமக்களின் உதவி கோரியுள்ள பொலிஸார்
>தலைமன்னார் பொலிஸ் பிரிவில் 15.02.2024 அன்று 09 வயது சிறுமியை வன்புணர்வு செய்து படுகொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் தப்பியோடியுள்ளார்.
அதன்படி வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கந்தையா விஜயன் என்ற அப்துல் ரஹ்மான் என்ற சந்தேக நபர் தொடர்பில் தகவல் ஏதேனும் தெரிந்தால் 0718591364 அல்லது 0718591370 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
தலைமன்னாரில் 9 வயது சிறுமி கொலையுடன் தொடர்புடைய நபர் தப்பியோட்டம்- பொதுமக்களின் உதவி கோரியுள்ள பொலிஸார்
Reviewed by Author
on
June 02, 2024
Rating:

No comments:
Post a Comment