யாழ்பாணத்தில் சம்பவம் செய்த மன்னார் இரானுவம்
இந்தியாவில் இருந்து கடல் வழியாக யாழ்பாணத்திற்கு கொண்டு வரப்பட்ட 156 கிலோ கேரள கஞ்சாவை மன்னார் பொலிஸார் மற்றும் மன்னார் இரானுவத்தின் 54 படைப்பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
மன்னார் 54 படைப்புரிவு இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ்பாணம் அரியாலை பகுதி ஊடாக கடத்தப்படவிருந்த 156.4 கிலோ கேரள கஞ்சாவுடன் இந்தியாவை சேர்ந்த இரு நபர்களை கைது செய்துள்ளனர்
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மதிப்பு 4 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை யாழ்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Reviewed by Author
on
August 13, 2024
Rating:


No comments:
Post a Comment