அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி ஏ9 வீதியில் பாரிய விபத்து: ஸ்தலத்தில் பலியான நபர்

கிளிநொச்சி A 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்தில் கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்திப் பயணித்துள்ளது.

அதன் போது, அதே திசையில் பயணித்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பார ஊர்தியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.




கிளிநொச்சி ஏ9 வீதியில் பாரிய விபத்து: ஸ்தலத்தில் பலியான நபர் Reviewed by Author on August 27, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.