யாழில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விசாரணைகளை தொடர்ந்து ஆசிரியரை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது
Reviewed by Author
on
January 23, 2025
Rating:
Reviewed by Author
on
January 23, 2025
Rating:


No comments:
Post a Comment