அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் CTB யின் அவல நிலை இலாபமும் இல்லை நட்டமும் இல்லை மக்களுக்கு நன்மையும் இல்லை

 மன்னார் இலங்கை பொது போக்குவரத்து சாலையின் அவல நிலை தொடர்பில் ஆராய்வதற்கான கண்கானிப்பு வியஜம் ஒன்றை மேற்கொண்டு  இலங்கை பொது போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் இன்றையதினம் காலை கண்காணிப்பு வியஜம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்


 இதன் போது தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் போக்குவரத்து சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான பேரூந்துகள் உரிய பராமறிப்பின்றி மன்னார் போக்குவரத்து சாலையில் நிறுத்தப்பட்டு கவனிப்பின்றி கரல் கட்டிய நிலையில் காணப்பட்ட நிலையில் குறித்த வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் பல வருடங்களாக கொள்வனவு செய்யப்படாமையினால் இந்த நிலை என மன்னார் போக்குவரத்து சாலையினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது


அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் இருந்து பல தூர பகுதிகளுக்கான சேவை நீண்டகாலங்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போதும் கொழும்பு கண்டி போன்ற தூர பகுதிகளுக்கு மிகவும் பழுதடைந்த போரூந்துகளையே மன்னார் போக்குவரத்து சாலை பயன்படுத்தி வருகின்றது


இவ்வாறான நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கண்காணிப்பு விஜயத்தின் பின் கருத்து தெரிவிக்கையில் மன்னார் பொது போக்குவரத்து சாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் விரைவில் அவற்றை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் அதே நேரம் பழுதடைந்துள்ள பேரூந்துகளை மீள்பயண்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான உதிரிபாகங்கள் விரைவில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள உள்ளதாகவும் அவற்றில் ஐந்து திருத்தப்பட்ட இஞ்சின்கள் விரைவில் மன்னார் போக்குவரத்து சாலைக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்


அதே நேரம்  மன்னார் மற்றும் முல்லைத்தீவு பொது போக்குவரத்து சாலைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் பல கோடி பெறுமதியான அரச சொத்துக்கள் விரையம் செய்யப்பட்டுள்ளதாகவும்  இந்த நிலைக்கான காரணம் தொடர்பில் விரைவில் விசாரணைகள் மோற்கொள்ளவுள்ளதாகவும் அதன் அடிப்படை விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொது போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்திருந்தார்


மன்னார் போக்குவரத்து சாலையின் இந்த நிலை தொடர்பிலும் மன்னார் போக்குவரத்து சாலையில் பயன்படுத்தப்படும் பேரூந்துகளின் நிலை தொடர்பிலும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பிலும் பல வருடங்கள் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் கடந்த இரண்டு வருடங்கள் எந்த ஒரு உயர் அதிகாரிகளும் மன்னார் போக்குவரத்து சாலைக்கு விஜயம் மேற்கொண்டு மக்கள் முறைப்பாடுகள் தொடர்பாகவோ பேரூந்து சாலையின் நிலை தொடர்பாகவோ பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது








மன்னார் CTB யின் அவல நிலை இலாபமும் இல்லை நட்டமும் இல்லை மக்களுக்கு நன்மையும் இல்லை Reviewed by Vijithan on April 30, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.