வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கான விசேட அறிவித்தல்
உத்தியோகபூர் வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் கிடைக்காத வாக்காளர்களுக்கு தபால் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அஞ்சல் மூலம் இதுவரை கிடைக்கவில்லை என்றால், தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதி செய்வதன் மூலம் அதைப் பெறலாம் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் மே 6 ஆம் திகதி மாலை 4.00 மணி வரை இந்த வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கான விசேட அறிவித்தல்
Reviewed by Vijithan
on
April 30, 2025
Rating:

No comments:
Post a Comment