மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக செ. மாணிக்க ராஜாவும்,பிரதி தவிசாளராக கா.செந்தில்குமாரும் தெரிவு
மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த செல்லத்துரை மாணிக்கராஜா தெரிவு செய்யப்பட்டார்.
தவிசாளர், பிரதித் தவிசாளருக்கான தெரிவு மண்முனைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இன்று(11) நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவு செய்யப்பட்டார்.
நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக செ. மாணிக்க ராஜாவும்,பிரதி தவிசாளராக கா.செந்தில்குமாரும் தெரிவு
Reviewed by Vijithan
on
June 12, 2025
Rating:

No comments:
Post a Comment