மரத்தில் பேருந்து மோதி கோர விபத்து
சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (04) பகல் 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து, பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்தது.
இந்த விபத்து காரணமாக, சிலாபம் - புத்தளம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மரத்தில் பேருந்து மோதி கோர விபத்து
Reviewed by Vijithan
on
July 04, 2025
Rating:

No comments:
Post a Comment