தங்காலை வீட்டிற்குச் சென்று மகிந்தவை சந்தித்தார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, ரணில் விக்கிரமசிங்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் ஆற்றிய பங்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கார்ல்டன் இல்லத்திற்கு விஜயம் செய்தபோது மகிந்த ராஜபக்சவின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து விசாரித்ததாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
September 28, 2025
Rating:


No comments:
Post a Comment