காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கியதைத் தொடர்ந்து, காசாவில் இன்று காலை 09.00 மணிக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக, இஸ்ரேல் காசாவின் சில பகுதிகளிலிருந்து படைகளை பின்வாங்கத் தொடங்கியுள்ளது.
ஹமாஸ் 72 மணி நேரத்திற்குள் 20 உயிருடன் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், 28 இறந்தவர்களின் உடல்களையும் விடுவிக்க உள்ளது.
இதற்கு பதிலாக, இஸ்ரேல் 250 ஆயுள் தண்டனை பெற்ற பாலஸ்தீனியர்கள் உட்பட 1,700-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்கிறது.
மேலும், ரஃபா எல்லைச் சோதனை நிலையம் திறக்கப்பட்டு, காசாவுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட உள்ளன.
டிரம்பின் 20 புள்ளி திட்டத்தின் முதல் கட்டமாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
ஈஜிப்து, கத்தார், துருக்கி ஆகியவற்றின் உதவியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளன.
தெலாவிவ் மற்றும் காசாவில் கொண்டாட்டங்கள் நடைபெற்றாலும், சில பகுதிகளில் இரவு நேரத் தாக்குதல்கள் தொடர்ந்ததாக அறிக்கைகள் உள்ளன.
இரு ஆண்டு கால போரில் 67,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பின் இந்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
Reviewed by Vijithan
on
October 10, 2025
Rating:
Reviewed by Vijithan
on
October 10, 2025
Rating:


No comments:
Post a Comment