யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி
யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
யட்டியந்தோட்டை - கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ருவான்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி
Reviewed by Vijithan
on
November 02, 2025
Rating:
Reviewed by Vijithan
on
November 02, 2025
Rating:


No comments:
Post a Comment