கிளிநொச்சியில் இருவேறு விபத்துக்களில் மூவர் காயம்!
கிளிநொச்சியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் மேலதிக கிசிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில், இன்று (வியாழக்கிழமை) காலை கிளிநொச்சி டிப்போ வீதியில் ரயில் கடவைக்கு அருகில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்தோடு இரு பாடசாலை சிறார்கள் சிறு காயமுற்றுள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக ஏ-9 பிரதான வீதியில் நேற்றிரவு பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
 
        Reviewed by Author
        on 
        
September 03, 2020
 
        Rating: 




No comments:
Post a Comment