அண்மைய செய்திகள்

recent
-

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.பாரூக்- முஸ்லிம் எய்ட் சர்வதேச மனிதாபிமான தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு-


வன்னி  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.பி.பாறுக்
அவர்களுக்கும் முஸ்லிம் எய்ட் சர்வதேச மனிதாபிமான தொண்டு நிறுவன
பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று அண்மையில் அந்நிறுவனத்தின்
தலைமைக் காரியாலயத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


 இதன்போது மீள்குடியேற்றம் இடம்பெறுகின்ற போது பௌதீக ரீதியாக மக்கள்
எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் முஸ்லிம் எய்ட்
நிறுவனம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது என கூறிய
பாராளுமன்ற உறுப்பினர் மேலும் அவர்களின் செயற்பாடுகளை வடமாகாணத்தில்
விஸ்தரிப்பது தொடர்பாகவும் சில சொல்லாடல்களைப் பகிர்ந்து கொண்டார்.



இக்கலந்துரையாடலின் போது முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் பணிப்பாளர்,
நிகழ்ச்சித்திட்டப் பொறுப்பாளர், வடமாகாண செயற்திட்டப் பொறுப்பாளர்,
பொறியியலாளர் ஐ.இஸ்ஸதீன் மற்றும் ஷிபான் மஹ்றூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.பாரூக்- முஸ்லிம் எய்ட் சர்வதேச மனிதாபிமான தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு- Reviewed by NEWMANNAR on June 27, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.