மன்னார் அரச அதிபர்கள் திடீர் இடம் மாற்றம்,,முதற் தடவையாக மன்னார் மாவட்டத்திற்கு பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்
முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.பத்திநாதன் உடனடியாக மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய இடத்திற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராகிய நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பணியாற்றிய சரத் ரவீந்திர அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
.
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச அதிபராக அ.பத்திநாதன் கடந்த சுமார் 9 மாதங்களாகக் கடமையாற்றி வந்துள்ளார். இந்த மாவட்டத்தின் அரச அதிபராகக் கடமையாற்றிய நா.வேதநாயகன் மன்னார் மாவட்ட அரச அதிபராக இடம் மாற்றம் செய்யப்பட்டிருந்து தற்போது மீண்டும் முல்லைத்தீவுக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.
இதேவேளை முதற் தடவையாக மன்னார் மாவட்டத்திற்கு பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்
மன்னார் அரச அதிபர்கள் திடீர் இடம் மாற்றம்,,முதற் தடவையாக மன்னார் மாவட்டத்திற்கு பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்
Reviewed by Admin
on
November 10, 2011
Rating:

No comments:
Post a Comment