அண்மைய செய்திகள்

recent
-

இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்ற தமிழ் மொழிக் கண்காட்சி – 2012

பாடசாலை ரீதியாக நடைபெற்றுவரும் தமிழ் மொழிக் கண்காட்சிகளின் வரிசையில் மேற்படி கண்காட்சி மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையில் இன்று (13.07.2012) மு.ப 10.00 மணியளவில் அதிபர் திரு. U.A.Q.J பெர்ணான்டோ அவர்கள் தலைமையில் பொறுப்பாசிரியர் திருமதி. B.R. ரணீஸ்குமார் அர்களுடைய வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களுடைய முழுமையான பங்களிப்புடன் நடைபெற்ற இக் கண்காட்சியை பார்வையிட மன்னார் வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து கல்வி அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து வருகைதந்த திருமதி.விக்டர் லெம்பேட் ஜஉதவிக் கல்விப்பணிப்பாளர்(தமிழ் மொழி)ஸ மற்றும் திருமதி.டீ.சியான் ஜபாடஇணைப்பாளர் (தமிழ் மொழி)ஸ ஆகியோர் கண்காட்சிக் கூடத்தை நாடா வெட்டி திறந்து வைத்து மாணவர்களுடைய ஆக்கங்களைப் பார்வையிட்டதுடன் மாணவர்களையும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் இணைப்பாளர் உரையாற்றுகையில் மாணவர்களாகிய நீங்கள் புத்தகப் படிப்புடன் மட்டும் நின்றுவிடாது இதுபோன்ற உங்களுடைய திறன்களை வளர்க்கக் கூடிய செயற்பாடுகளை ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் செய்ய வேண்டுமெனவும் கூறினார்.
இக் கண்காட்சியை பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பார்வையிட்டு மாணவர்களுடைய முயற்சியை பாராட்டி அவர்களுடைய செயற்பாட்டை ஊக்கப்படுத்தினர்.

இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்ற தமிழ் மொழிக் கண்காட்சி – 2012 Reviewed by NEWMANNAR on July 14, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.