தலைமன்னாரில் குண்டுவெடிப்பு!- படுகாயமடைந்த 3 சிறுவர்கள் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!
தலைமன்னார் பிரதேசத்தின் பியர் பகுதியிலுள்ள கடற்பகுதி கடற்கரைக்கு அண்மையில் பற்றையினுள் குண்டொன்று வெடித்தமையினால் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டு பொருள் என நினைத்து குறித்த வெடிபொருளினை எடுத்து விளையாடிய போதே குறித்த குண்டு வெடித்ததுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுவர்கள் மன்னார் பொதுவைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமன்னார், பியர் பகுதியை சேர்ந்த 14-15 வயதான சிறுவர்களே காயமடைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுவர்கள் மன்னார் பொதுவைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமன்னார், பியர் பகுதியை சேர்ந்த 14-15 வயதான சிறுவர்களே காயமடைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
தலைமன்னாரில் குண்டுவெடிப்பு!- படுகாயமடைந்த 3 சிறுவர்கள் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!
Reviewed by NEWMANNAR
on
September 23, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment