அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்டோர் 24 ஆயிரமாக உயர்வு

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் இது வரை 6275 குடும்பங்களைச் சேர்ந்த 24856 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.


 இவர்களுள் 3016 குடும்பங்களைச் சேர்ந்த 10839 பேர் இடம் பெயர்ந்த நிலையில் நலம் புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெயர்ந்துள்ள மக்கள் 55 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 இடம் யெர்ந்துள்ள மக்களுக்கான உணவு வசதிகள் உற்பட சகல தேவைகளையும்,குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலாளர்கள் மேற்கொண்டு வருவதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்டோர் 24 ஆயிரமாக உயர்வு Reviewed by NEWMANNAR on December 29, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.