அண்மைய செய்திகள்

recent
-

இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிராக மாநாடு: பொது பல சேனா அறிவிப்பு

மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


 கிறிஸ்தவ தலையீடுகளிலிருந்து மன்னார் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும், மன்னார் பேராயரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 மன்னார் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது அமைப்பிற்கு ஆதரவளிப்பதாகவும் விரைவில் இம்மாநாடு நடத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிராக மாநாடு: பொது பல சேனா அறிவிப்பு Reviewed by Admin on May 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.