அண்மைய செய்திகள்

recent
-

பேராசிரியர் சிவானந்தனுக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது : அமெரிக்காவில் ஈழத்தமிழருக்குக் கிடைத்த கெளரவம்

ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளைமாளிகையினால் விழங்கப்படும் உயர்விருதான "Champion of Change" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று 29ஆம் திகதி காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒரவரே தழிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும், இவருடன் சேர்த்து 11 பேருக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.



சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் இடுபட்டுள்ளார். தனது முயற்சியினால் "சிவானந்தன் ஆய்வு மையம்" என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாபநோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார். இவரது அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெளதீகவியற்றுறையினரும் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 


யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
பேராசிரியர் சிவானந்தனுக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது : அமெரிக்காவில் ஈழத்தமிழருக்குக் கிடைத்த கெளரவம் Reviewed by NEWMANNAR on May 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.