அண்மைய செய்திகள்

recent
-

பேச்­சு­வார்த்தை முயற்­சியில் இனியும் நாம் ஏமா­று­வ­தற்கு தயா­ராக இல்லை: தென்­னா­பி­ரிக்கத் தூதுக்­கு­ழு­விடம் சம்­பந்தன்

அர­சாங்­கத்­துடன் சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­யினை ஆரம்­பிப்­ப­தற்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தயா­ரா­கவே உள்­ளது. இதற்­கான முயற்­சியில் தென்­னா­பி­ரிக்கா ஈடு­பட்டால் அதற்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். ஆனால் இனியும் நாம் ஏமாறு­வ­தற்கு தயா­ராக இல்லை என்று இலங்கை வந்­துள்ள தென்­னா­பி­ரிக்க தூதுக்­கு­ழு­வி­ன­ரிடம் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வினர் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.



கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை இலங்கை வந்த தென்­னா­பி­ரிக்­காவின் பிரதி வெளிவி­வ­கார அமைச்சர் இப்­ராஹிம் இப்­ராஹிம் தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வினர் நேற்று காலை இரண்­டா­வது தட­வை­யா­க­வும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். இந்தச் சந்­திப்பின் போதே கூட்­ட­மைப்­பினர் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

தென்­னா­பி­ரிக்க பிரதி வௌிவி­வ­கார அமைச்சர் தலை­மை­யி­லான குழு­வினர் கடந்த திங்­கட்­கி­ழமை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரை சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். இதனை அடுத்து அன்­றைய தினம் மாலையும் நேற்று முன்­தி­னமும் அர­சாங்­கத்­த­ரப்பினரை சந்­தித்து இக்­கு­ழு­வினர் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். வௌிவி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் , அமைச்­சர்­க­ளான நிமல் சிறி­பால டி சில்வா, அனு­ர­பி­ரி­ய­தர்­ஷ­ன யாப்பா, பிரதி அமைச்சர் பைசல் முஸ்­தபா பல­ரையும் இக்­கு­ழு­வினர் சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். இத­னை­­ய­டுத்தே நேற்று காலை மீண்டும் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் தென்­னா­பி­ரிக்கக் குழு­வினர் சந்­தித்து அர­சாங்­கத்­த­ரப்­பி­னரின் நிலைப்­பாடு குறித்து எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.

இந்தச் சந்­திப்பில் கருத்துத் தெரி­வித்த கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தென்­னா­­பி­ரிக்­காவின் சமா­தான முயற்­சிக்கு ஒத்­து­ழைப்பு வழங்க நாம் தயா­ரா­கவே உள்ளோம். ஆனால் பேச்­சு­வார்த்தை என்ற பெயரில் மீண்டும் ஏமா­று­வ­தற்கு நாம் தயா­ராக இல்லை. நியா­ய­மான நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டிய அர­சியல் தீர்­வினை நாம் உதா­சீனம் செய்­ய­மாட்டோம். தமிழ் மக்­க­ளுக்கு நீதி­யா­னதும், நியாயமான தீர்­வொன்று அவ­சி­ய­மாகும். தமிழ் மக்­க­ளுக்கு விமோ­ச­னம் கிடைப்­ப­தென்­பது அவ­சி­ய­மாகும். இதற்­காக நாம் தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பு வழங்க தயாராக உள்ளோம் என்று கூறி­யுள்ளார்.

கூட்­ட­மைப்­பி­ன­­­ரு­ட­னான சந்­திப்பை அடுத்து தென்­னா­பி­ரிக்கக் குழு­வினர் நேற்று மாலை நாடு திரும்­பி­யுள்­ளனர். தொடர்ந்தும் இரு­த­ரப்­பி­ன­ரு­டனும் தொடர்­பு­களைப் பேணு­வ­தென்றும் இந்­தியா, அமெ­ரிக்கா உட்­பட இலங்­கைப்பிரச்­சி­னையில் ஆர்­வ­முள்ள நாடு­க­ளுடன் தொடர்­பினைப் பேணி சமா­தான முயற்­சிக்­கான சூழலை உரு­வாக்­கு­வது என்றும் தென்­னா­பி­ரிக்கக் குழு­வினர் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பேச்­சு­வார்த்தை முயற்­சியில் இனியும் நாம் ஏமா­று­வ­தற்கு தயா­ராக இல்லை: தென்­னா­பி­ரிக்கத் தூதுக்­கு­ழு­விடம் சம்­பந்தன் Reviewed by Admin on June 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.