அண்மைய செய்திகள்

recent
-

காப்புறுதி திட்டம்; மன்னார் மீனவரிடையே பதற்றம்

சகல மீன்பிடிப் படகுகளும் காப்புறுதி செய்யப்பட வேண்டும் எனவும் இல்லாவிடின் கடற்தொழிலாளர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் மன்னார் மீனவர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


 இது தொடர்பாக விசனம் தெரிவித்த கடற்தொழிலாளர்கள், காப்புறுதி செய்தலின் நன்மைகளை தாம் விளங்கியுள்ள போதிலும் ஒரே தடவையில் முழு காப்புறுதி கட்டுப்பணத்தையும் செலுத்த வேண்டுமென நிர்பந்திப்பது நியாயமற்றதென கூறினர்.

 காப்புறுதி கட்டுப்பணத்தை தவணை முறையில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 அண்மையில் நாட்டின் பல பாகங்களிலும் உண்டான கடல் கொந்தளிப்பு காரணமாக பல உயிர்கள் பலியானதையும் வள்ளங்கள் சேதமடைந்ததையும் கருத்திலெடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மன்னார் உதவி மீன்பிடி பணிப்பாளர் கூறினார்.


காப்புறுதி திட்டம்; மன்னார் மீனவரிடையே பதற்றம் Reviewed by Admin on July 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.