அண்மைய செய்திகள்

recent
-

பொன்ரேறா உற்பத்திகளுக்கு எதிரான தடை நீடிப்பு

பொன்ரேறா உற்பத்தி பொருட்களை விநியோகிப்பதற்கும் விற்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட்டுள்ளது.

 கம்பஹா மாவட்ட நீதிமன்றமே பொன்ரேறா நிறுவன உற்பத்தி பொருட்களை தடைச்செய்யும் கட்டளையை கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. இந்த தடையையே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை நீடித்துள்ளது. செப்டெம்பர் 3 ஆம் திகதி வரையே இந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

 அரச தாதியர் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு உட்படுத்திய போதே நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப்பிறப்பித்திருந்தது. அதுமட்டுமன்றி பொன்ரேறா நிறுவன உற்பத்திகள் தொடர்பில் விளம்பரம் செய்வது மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடாகும் என்றும் நீதிமன்றம் அன்று சுட்டிக்காட்டியிருந்தது.

 பொன்ரேறா உற்பத்தி பொருட்களில் டீ.சி.டீ ரசாயனம் கலந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


பொன்ரேறா உற்பத்திகளுக்கு எதிரான தடை நீடிப்பு Reviewed by Admin on August 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.