அண்மைய செய்திகள்

recent
-

புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரதியை விற்பனை செய்யத் தடை

புலமைப் பரிசில் பரீட்சை நிறைவுபெற்றாலும் வினாத்தாளின் பிரதியை பெற்றுக்கொள்ளவும், அச்சிட்டு விற்பனை செய்யவும் வேறு தரப்பினரிடம் கைமாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J புஸ்பகுமார் தெரிவித்துள்ளார்.

 பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கும் வரை குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும், மதிப்பீட்டு பணிகள் நிறைவுபெற்றதன் பின்னரே அதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று முற்பகல் வெற்றிகரமாக நடைபெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சையில் மூன்று இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் தேற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 ஒரு மாதத்திற்குள் புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுபேறுகளை வெளியிட எண்ணியுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.


புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரதியை விற்பனை செய்யத் தடை Reviewed by Admin on August 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.