அண்மைய செய்திகள்

recent
-

குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டி 10 பவுண் தங்க நகைகள் கொள்ளை

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வறணி வடக்குப் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடு ஒன்றினுள் உட்புகுந்த திருடர்கள் குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டி சுமார் 10 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. கொடிகாமம் வரணி வடக்கு பகுதியில் வீடு ஒன்றினுள் நள்ளிரவு வேளையில உட்புகுந்த கொள்ளையர்கள் அவ் வீட்டில் வசித்த குழந்தையைக் கொல்லப்போவதாக குழந்தையின் கழுத்தில் கூரிய கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.

 குழந்தையை விடவேண்டுமாயின் சகல நகைகளையும் தருமாறு அச்சுறுத்தியுள்ளனர். குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் இவ் வீட்டில் வசித்தவர்கள் சுமார் 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டி 10 பவுண் தங்க நகைகள் கொள்ளை Reviewed by Admin on August 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.