அண்மைய செய்திகள்

recent
-

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பின் கார­ண­மா­கவே அதி­க­ள­வி­லான சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள்

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பின் கார­ண­மா­கவே அதி­க­ள­வி­லான சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம் பெற்­று­வ­ரு­கின்­றன. இது அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்துச் செல்­வ­தனை அவ­தா­னிக்க முடி­கி­றது என அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­லாளர் ஐ.எம்.ஹனிபா தெரி­வித்தார்.

‘‘றூவி­ஷன்’’­அ­மைப்­பினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரும் பிர­தேச சிறுவர் மற்றும் பரிந்­து­ரைத்தல் குழுவின் குழுக் கூட்டம் அட்­டா­ளைச்­சேனை சுகா­தார வைத்­திய அதி­காரி காரி­யா­ல­யத்தில் பரிந்­து­ரைத்தல் குழுவின் தலை­வரும் பிர­தேச செய­லா­ள­ரு­மான ஐ.எம்.ஹனிபா தலை­மையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் உரை­நி­கழ்த்­து­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;-

வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காக செல்லும் பெண்­க­ளுக்கு ஆரம்ப முற்­கொ­டுப்­ப­ன­வாக ஒரு இலட்சம் ரூபா முக­வர்­க­ளினால் வழங்­கப்­ப­டு­வது கஷ்­ட­நி­லை­யி­லுள்ள குடும்­பங்­களை ஊக்­கு­விப்­ப­தாக அமை­கின்­றது.இவ்­வாறு வழங்­கப்­படும் பணத்­திற்­கா­கவே அதி­க­ள­வி­லான பெண்கள் தமது பிள்­ளை­க­ளையும் குடும்­பங்­க­ளையும் இழந்து செல்­வ­தற்கு காரணமாக அமைந்­துள்­ளது.

இவ்­வா­றான செயற்­பா­டுகள் கார­ண­மாக அதிகம் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­வர்கள் சிறு­வர்­களே ஆவார். பெற்­றோர்­களின் பாது­காப்­பி­லில்­லாத அதி­க­மான சிறு­வர்கள் தமது உற­வி­னர்­க­ளி­னாலும் அய­ல­வர்­க­ளி­னாலும் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு ஆளா­கி­வ­ரு­வதை நாம் நாளாந்தம் ஊட­கங்கள் வாயி­லாக அறியக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

தற்­போது ஐந்து வய­திற்­குட்­பட்ட பிள்­ளைகள் இருக்கும் எந்­த­வொரு தாயும் வெளி­நாடு செல்ல முடி­யாது என அர­சாங்கம் கண்­டிப்­பான உத்­த­ரவை வழங்­கி­யுள்­ளது. அதற்­காக பிர­தேச செய­லா­ளர்கள், சிறுவர் நன்­ந­டத்தை அதி­கா­ரிகள், கிரா­ம­சேவை அதி­கா­ரிகள் ஆகியோர் பெண்கள் வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பிற்­காக செல்லும் போது சிறு­வர்கள் தொடர்பில் உறு­திப்­ப­டுத்தல் வேண்டும். இதற்­காக தியாக மனப்­பாங்­குடன் அனைத்து தரப்­பி­னரும் உதவ முன் வருதல் வேண்டும்.

பெற்­றோர்­க­ளினால் பாது­காப்­ப­ளிக்­கப்­ப­டாத சிறு­வர்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்­து­வதும் அவர்­க­ளுக்கு உத­வு­வதும் சமூ­கத்தின் கட­மை­யாகும். இதே­வேளை, சமு­கத்தை வழி­ந­டத்­து­ப­வர்கள் பாது­கா­வ­லர்கள் மற்றும் பொறுப்­பா­ளர்கள் சிலர் சிறு­வர்கள் தொடர்பில் பொறுப்­பற்ற விதத்தில் நடந்து கொள்­வதும் துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதும் மிகவும் வேத­னைக்­கு­ரிய விடயமாகும். இவ்வாறானவர்களை சமூகம் ஒரு போதும் அங்கீகரிக்காது என்றார்.


வெளி­நாட்டு வேலை­வாய்ப்பின் கார­ண­மா­கவே அதி­க­ள­வி­லான சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் Reviewed by Admin on August 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.