அண்மைய செய்திகள்

recent
-

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பாதுகாப்பு கடமைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

யாழ் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பாதுகாப்பு கடமைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 52 வயதான புத்ததாச என்ற உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு குறித்த பாடசாலைக்கு பாதுகாப்பு கடமைக்காக சென்றிருந்தார்.

எந்த காரணத்தினால் அவர் உயிரிழந்தர் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பாதுகாப்பு கடமைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு! Reviewed by Admin on August 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.