நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பாதுகாப்பு கடமைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 52 வயதான புத்ததாச என்ற உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு குறித்த பாடசாலைக்கு பாதுகாப்பு கடமைக்காக சென்றிருந்தார்.
எந்த காரணத்தினால் அவர் உயிரிழந்தர் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பாதுகாப்பு கடமைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!
Reviewed by Admin
on
August 04, 2013
Rating:

No comments:
Post a Comment