யாழில் நவநீதம்பிள்ளையின் அரசியல் கட்சிகளுடான சந்திப்புக்கள்! கவனம் செலுத்தும் கபே அமைப்பு
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடும் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்லது குழுவை மட்டும் மனித உரிமை ஆணையாளர் சந்தித்தால், இதன் மூலம் தேர்தல் நெறிமுறைகளுக்கு அப்பாலான சாதக நிலைமை தேர்தலில், அந்த அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு கிடைக்கும்.
போர் காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அறிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட யோசனைகளில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கவனம் செலுத்தப்பட்டமை சாதகமான விடயமாகும்.
இப்படியான சூழ்நிலையில், யாழ்ப்பாணத்தை கேந்திரமாக கொண்டுள்ள ஊடகங்கள் நவநீதம்பிள்ளையின் யாழ்ப்பாணம் விஜயம் தொடர்பாக அதிக கவனத்தை செலுத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணையாளர் தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது தெரிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சி அல்லது குழுக்களை மாத்திரம் சந்தித்தால், அது அந்த கட்சிகளுக்கு தேர்தலில் சாதகமாக அமைவதை தவிர்க்க முடியாது.
வடக்கில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை அவர் சந்திப்பதாக இருந்தால் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
மனித உரிமை தொடர்பான சர்வதேச இணக்கப்பாடுகளை கடைபிடிக்க கடமைப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் சமநிலைமையான நியாயத்தை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்றார்.
யாழில் நவநீதம்பிள்ளையின் அரசியல் கட்சிகளுடான சந்திப்புக்கள்! கவனம் செலுத்தும் கபே அமைப்பு
Reviewed by Admin
on
August 25, 2013
Rating:

No comments:
Post a Comment