கிளிநொச்சி வயல்களில் பாதீனியம் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அழிக்கவேண்டும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதீனியச் செடி மிகவும் அரிதாகக் காணப்பட்ட நிலையில் தற்போது இச் செடியினை அதிக இடங்களில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி கணேசபுரம் வீதி மற்றும் கணேசபுரம் வயல் வெளிகள், ஜெயந்திநகர், திருநகர், இரத்தினபுரம் ஆகிய பகுதிகளில் இச் செடிகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந் நிலையில் பருவ மழைக்காலங்களில் குறித்த செடிகள் ஏனைய இடங்களுக்குப் பரவும் அபாய நிலை காணப்படுகின்றது. எனவே இதனைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி வயல்களில் பாதீனியம் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அழிக்கவேண்டும்.
Reviewed by Admin
on
August 10, 2013
Rating:
No comments:
Post a Comment