அண்மைய செய்திகள்

recent
-

அர­சாங்­கமும் இரா­ணு­வமும் அரங்­கேற்றும் காடைத்­த­னமான நாடகமே நாவற்­குழி விகாரை மீதான தாக்­குதல்:சுரேஷ்

யாழ். நாவற்­கு­ழியில் விகாரை மீதான கைக்­குண்டுத் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இரா­ணு­வத்­தி­னரே உள்­ளனர் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். இந்தக் கைக்­குண்டுத் தாக்­குதல் இரா­ணுவப் பிர­சன்­னத்தை நியா­யப்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் திட்­ட­மிட்ட நாடகம் எனவும் இந்தத் தாக்­கு­தலை கண்­டிப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

ஜன­நா­யக வேட­மிட்டு அர­சாங்­கமும் அதன் இரா­ணு­வமும் அரங்­கேற்றும் காடைத்­த­னங்­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.
நாவற்­குழி சிங்­களக் குடி­யேற்றக் கிரா­மத்தில் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் விகாரை மீது கடந்த சனிக்­கி­ழமை இரவு குண்டுத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

குறித்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-
வடக்கில் நீண்ட கால­மாக நில­வி­வந்த யுத்­தத்­திற்குப் பின்னர் இடம்­பெற்­றி­ருக்கும் நாவற்­குழி விகாரை மீதான கைக்­குண்டுத் தாக்­குதல், இரா­ணுவப் பிர­சன்­னத்தை நியா­யப்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் திட்­ட­மிட்ட ஒரு நாட­க­மாகும். வெலி­வே­ரிய சம்­ப­வத்தின் பின்னர் சிங்­கள மக்கள் மத்­தியில் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ரான எதிர்ப்புக் குரல்கள் அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்தச் சூழ்­நி­லையில் இவ்­வா­றான எதிர்ப்பை திசை­தி­ருப்பும் நோக்­கிலும் அவற்றை நியா­யப்­ப­டுத்­தவும் நாவற்­கு­ழியில் இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் மூலம் தமிழ் மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தி, நடை­பெ­ற­வுள்ள வட மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் மக்­களின் வாக்­க­ளிப்பு வீதத்தைக் குறைப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­படும் சதி­வே­லை­யா­கவே இதனை நாம் பார்க்­கிறோம்.

நாவற்­குழி சிங்­களக் குடி­யேற்­றத்­திட்டம் என்­பது அரசாங்க நிலத்தில் மேற் கொள் ளப்பட்டுள்ள ஒரு சட்ட விரோதமான குடி யேற்றமாகும். இருந்தும், இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் திட்டமிட்ட ஒரு நாடகம் என்பது தெட்டத்தெளிவான உண் மையாகும் என்றார்.
அர­சாங்­கமும் இரா­ணு­வமும் அரங்­கேற்றும் காடைத்­த­னமான நாடகமே நாவற்­குழி விகாரை மீதான தாக்­குதல்:சுரேஷ் Reviewed by NEWMANNAR on August 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.