அண்மைய செய்திகள்

recent
-

இ.போ.ச. சாரதிகளின் அசமந்தப் போக்குகள்! அதி­க ­வே­கத்தில் பேருந்துகளை ஓட்டுவதால் பயணிகள் அச்சம்!

இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபையின் பருத்­தித்­துறை - கொழும்பு சேவையில் ஈடு­ப­டு­கின்ற சார­திகள் பேருந்துகளை மிக வேக­மாகச் செலுத்தி வரு­வதால் விபத்­துக்கள் ஏற்­படக் கூடிய நிலை காணப்­ப­டு­வ­தா­கவும், இதனால் தாம் மிகுந்த அச்­சத்­துடன் பய­ணிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பய­ணிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். இதே­வேளை, இச் சேவைக்­கு­ரிய பேருந்­துகள் நிர்­ண­யிக்­கப்­பட்ட நேரத்­திற்கு முன்­ன­தா­கவே சேவை­யினை ஆரம்­பிப்­ப­தாலும் தாம் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொண்டு வரு­வ­தாகப் பய­ணிகள் தெரி­விக்­கின்­றனர்.

 இவ் விடயம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபையின் பருத்­தித்­துறைச் சாலைக்­கு­ரிய பய­ணிகள் பேருந்துச் சேவையில் ஈடு­ப­டு­கின்ற சார­திகள் குறித்த பேருந்­து­களை கட்­டு­பாட்டு வேகத்­தினை விட அதி­க­வே­கத்தில் செலுத்தி வரு­வதால் விபத்­துக்கள் ஏற்­படக் கூடிய சூழல் காணப்­ப­டு­வ­தாகப் பய­ணிகள் தெரி­விக்­கின்­றனர். குறிப்­பாக பருத்­தித்­துறை - கொழும்பு செல்லும் பேருந்­துகள் மிக­வே­க­மாகச் செலுத்­தப்­ப­டு­வ­தாக பய­ணிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

 இதனால் குறித்த பேருந்தில் பய­ணிக்­கின்ற பய­ணி­களும் மிகுந்த அச்­சத்­து­ட­னேயே பிர­யா­ணங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அண்­மையில் ஆனை­யி­றவுப் பகு­தியில் இப்­பே­ருந்து சேவையில் ஈடு­பட்ட பேருந்து ஒன்று தடம்­பு­ரண்டு விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. இப் பேருந்தில் பய­ணித்த பய­ணிகள் பலரும் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர். 

 இதே­வேளை பருத்­தித்­துறை – யாழ்ப்­பாணம் சேவையில் ஈடு­ப­டு­கின்ற இச் சாலைக்­கு­ரிய பேருந்­துகள் நிர்­ண­யிக்­கப்­பட்ட நேரத்­திற்கு முன்­ன­தா­கவே சேவை­களை ஆரம்­பிப்­ப­தாலும், மக்கள் பாதிப்­ப­டை­கின்­றனர்.

 குறிப்­பாக காலையில் சேவையில் ஈடு­ப­டு­கின்ற பேருந்­துகள் எந்­த­வொரு நேர­வ­ரை­ய­றை­க­ளு­மின்றி சேவையில் ஈடு­ப­டு­வ­தா­கவும் பொது­மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே வீதி விபத்துக்களைக் கட்டுப் படுத்தி உயிராபத்துக்களைத் தடுப்பதற்கு இப்பேருந்துகளின் வேகத்தினை உரிய அதிகாரிகள் தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இ.போ.ச. சாரதிகளின் அசமந்தப் போக்குகள்! அதி­க ­வே­கத்தில் பேருந்துகளை ஓட்டுவதால் பயணிகள் அச்சம்! Reviewed by Admin on September 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.