அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.- படங்கள்

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். 

 தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்து நேற்று மாலை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

 தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஜர் படுத்தினர். 

இதன் போது குறித்த 22 மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக தலைமன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த மீனவர்களை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

 அத்துடன் 5 பேர் சுகவீனமுற்று இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து இவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் சிகிச்சைக்கான உதவிகளை வழங்குமாறு பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ உத்தரவிட்டார்.







தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.- படங்கள் Reviewed by Admin on October 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.